Tuesday, April 08, 2025

அகஸ்திய மஹா ரிஷி கோத்திரம், ஓசூர் லத்திகாரர், அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலின் வரலாறு



அருள்மிகு ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலின் வரலாறு :

 

குலம் : லத்திகாரர்

கோத்திரம் : அகஸ்திய மஹா ரிஷி கோத்திரம்                

மட்டமனை : ஓசூர் லத்திகாரர்

 ஊர் : ஏனாதி கிராமம், செம்பாண்டம்பட்டி (Post) , ஓமலூர், சேலம், தமிழ்நாடு  

A bunch of flowers on a rock

Description automatically generated


சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏனாதி என்ற சிறு நகரம் சீரும் சிறப்பும் மிக்க நகரமாக விளங்கியது அந்த நகரத்தின் மக்கள் நெசவு மற்றும் விவசாய தொழிலை பிரதானமாக செய்து வந்தனர் அந்த நகர த் தின் சுற்றிலும் நெல் வயல்கள் சூழப்பட்டு இருந்தனஏனாதி நகரமானது தூய காற்றும் நீர் வளம் மிக்கதாக விளங்கியது.

A group of people praying outside

Description automatically generated

 

கள்வர்களாலும் பகைவர்களாலும் நெருங்க முடியாதபடி காடுகளும் சூழ்ந்து காணப்பட்டன. ஏறியில் ப் போ தும் நீரின் அளவு கரை யின் விளிம்பு வரை இருந்து கொண்ட இருந்தது. ஆதி கேசவன் ஆலயம் தெற்கேயும் இப் பூவுலகத்தை அருள் செய்து வரும் ஈசன் ஆலயம் மேற்கே கொண்டதாகவும் மாரியை கொடுக்கும் மாரி ஆலயம் வடக்கே இருக்க எல்லையை காட்கும் பத்திரகாளி கிழக்கே இருந்து ஏனாதியின் எல்லையாய் நின்று நகரின் செழிப்பை கா த் து வந்தன. இன் நகரின் வடக்கு திசையில் எழுந்தருளியுள்ள சென்றைய பெருமாள் ஆலயம் தோன்றிய விதத்தை காண்போம்.

A group of people around a shrine

Description automatically generated

சீர் மிகு நா தி நகரதில் மகளுக்கும் எவ்விதமான பஞ்சமும் இல்லை என்பதாகும் உணவு பண்டங்கள் தேவைக்கு அதிகமாகவே விளைந்து வந்தன. அதே போல் நெற்களஞ்சியம் எங்கு நோகினும் நெற்குவிலல்களுடன் காணப்பட்டு வந்தன. இத்தகைய  நெற்களஞ்சியங்களில் ஒன்று கொண்டப்ப செட்டியாருடையது. அவரின் நெற்களஞ்சியத்தில் நெல்குவியால் ஒன்று பல நாட்கள் கவனிக்காமல் இருந்த கரணமாக அந்நெல்குவியாலின் மேல் புற்று ஒன்று தோன்ற ஆரம்பிடுவிட்டது. ஒரு நாள் கொண்டப்ப செட்டியார் தனது களஞ்சியத்தை சுற்றி நோக்கும் பொழுது ஒரு நெல்குவியாலின் மேல் புற்று ஒன்று தோன்றியத்தை கண்டு அதை அகற்ற உத்தரவிட்தார். வேலை ஆட்கள் அந்த புற்றை அகைற்றுவதற்காக அருகில் சென்ற பொழுது உள்ளிருந்து பெரிய நாகம் ஒன்று தோன்றி அகற்றும் பணியை செய்யவிடாமல் துரத்தியது. இந்த விஷயம் கொண்டப்ப செட்டியாருக்கு சொல்லப்பட்டது.

அன்று இரவு அவர் துயில் கொண்டிருந்த பொழுது அவருக்கு அருகில் நாகம் தோன்றி நான் பாற்கடலில் திருமாலுக்கு குடையாக விளங்கும் அதிசேசனின் வழி வந்தவன் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கும் இந்த ஏனாதி நகரத்தில் எழுந்தருளி இருக்கிறேன்.

நான் குடிகொண்டுள்ள செந்நெல்  புற்றினை அழிக்கவேண்டாம் நீங்கள் வணங்கும் திருமாலின் உறைவிடமாக இந்த செந்நெல்  புற்று விளங்குவதால் பூஜை செய்து வழிபாடு செய்து வர நன்மை உண்டாகும் என்று கூறியது.

கொண்டப்ப செட்டியாரும் செந்நெல் புற்றாநது தான் வணங்கும் மஹாவிஷ்ணுவின் இருப்பிடம் என்றறிந்து மகிழ்வுற்று அந்த புற்றுக்கு செந்நெல்ராயன் சுவாமி என பெயரிட்டார். ராயன் என்பது பெயரின் ஈற்றினில் வண ங் குவதற்குரிய சொல்லாகும்.

நாளடைவில் சென் நெல் ராயன் என்னும் பெயர் சென்னராயன் என்று வழங்கி இப்போது ஸ்ரீ விஷ்ணு வின் பெயர் பெருமாள் என்று ஈற்றில் சேர்க்கபட்டு ஸ்ரீ சென்றாய பெருமாள் என்று அழைக்பட்டு வருகிறது.

கொண்டு செட்டியார் திருமாலின் உறைவிடமான செந் நெல் புற்றினை மூலஸ்தானமாக கொண்டு ஒரு கோவில் கட்டி முடித்தார் கோவிலின் வடபுறம் செட்டியார் அவர்கள் வாழ்ந்து வந்தார் என்பது கோவிலில் அமைந்துள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது

இத்தகைய வரலாறு கொண்ட ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயமானது செந் நெல் நெற்களஞ்சியத்தில் ஸ்ரீ சென்றாய பெருமாள் நான்கு சதுர வடிவில் தோன்றி வளர்ந்தபின் சுமார் முன் நூறு ஆண்டுகள் அந்த களஞ்சியத்தையே கோவிலாகக் அமைத்து வணங்கி வந்துள்ளனர் அப்படி வணங்கி வந்த பக்தர்களில் ஏனாதி நகரில் வாழ்ந்த தேவாங்கர்கள் முதன்மையானவர்களாக இருந்தனர்.

அவர்களின் பெரும் முயிற்சியால்  ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயமானது 13-14 ஆம் நூறாண்டில் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்பது வரலாறு. கோவிலில் இருக்கும் கல்வெட்டின் படி கொண்டு செட்டியாரே இத்திருப்பணிஇல் முதன்மையாக விளங்கினார் என்பதும் அவரே மணமகனின் தந்தை என்பதும் தெரியவருகிறது. இன்றுவரை ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி ஏகாதசியில் கொண்டு செட்டி பூஜை என்ற பெயரால் ஸ்ரீ சென்றைய பெருமாள் திருக்கோவிலுக்கு வடைக்கில் மதிலை ஒட்டிய கல்வெட்டு உள்ள இடத்தில் இன்றும் பூஜை நடைபெறுகிறது.

A group of statues with flowers

Description automatically generated

ஏனாதி நகரத்திலும் அதன் அருகில் செம்மனஹள்ளி போன்ற ஊர்களில் வாழ்ந்து வந்த மனூர்குல தேவாங்க ஓசூர் லட்திகாரர்கள் ஸ்ரீ சென்றைய பெருமாள் தெய்வத்தை குல தெய்வமாக கொண்டு வழிபாடு செய்து வந்தனர். ஓசூர் லட்திகாரர் குடும்ப பெண் மகளான அக்கம்மாவிகற்கு தங்கள் பெற்றோர்கள் திருமணம் செய்ய எண்ணி கொண்டு செட்டியின் மகனை திருமணம் நிச்சயம் செய்தனர். அக்கம்மாவிகற்கு திருமணம் செய்யும் நாளில் மங்கல நாண்கட்டும்  மும்பு சுல்தானின் படைகள் வந்து திருமணத்தை தடை செய்து போர் புரிந்தது. மணமகன் எதிரி படைகளை கொன்று குவித்தார் அந்த போரில் தானும் வீர மரணம் எய்தினர். வீர மரணம் அடைந்த மணமகனின் ஆன்மா ஸ்ரீ சென்றாய பெருமாள் ஆலயத்திலுள்ள புற்றிநில் இரண்டறக் கலன்தது நம் முன்னோர் கூறிவரும் வரலாறாகும்.

அதனால் தங்கள் குலதெய்வமாகிய ஸ்ரீ சென்றாய பெருமாளுக்கும் குடும்ப தெய்வமாகிய அக்கம்மா தேவதைக்கும் பண்ணிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் 60 ஆம் கூடி பெருவிழ சீரும் சிறப்புமாக வழிவழியாக கொண்டாடப்பட்டு வருகிறது.


கோவிலின் சிறப்பு :

A close-up of a rock

Description automatically generated

கல்வெட்டு விபரம் :

"கொண்டப்ப திருப்பணி" என்றும்
சென்றாய பெருமாள் கோவிலுக்கு
"வடக்கு குடி அமைந்தோன்" என்றும் குறிப்பு காண படுகிறது.  

கோவில் ஸ்லோகம் :

ஸ்ரீ சென்றாய பெருமாள் துதி

மன்னுமருள் கொடுக்க மாநிலத்திலோங்குகுல  
சென்றாயபெருமாள் சீரடிகள் - சென்னிமிசை
சூடிமுறை கொண்டு கோத்திரம் செய்ய மனம்
நாடுவோ மென்றும் நலம்


 

A group of people eating at a long table

Description automatically generated

பெருமாள் கோவில் சிறப்புகள்.:

ஸ்தல விருச்சமரம் பால மரம் சிறப்புகள்.:

A tree next to a stone wall

Description automatically generated

இம்மரம் இலைபரித்தால் பால் சொட்டும் இங்கு உள்ள கடவுள் பால்கடலில்லுல்ல விஷ்ணு பகவான்  ஆவார் எனவே அவரை சுட்ரி பாலமரம் உள்ளது



மகிமை. ": இந்த மரத்தை நேய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நன்னைநடக்கும் வேண்டிய வேடுதல் நிறைவெர திரு மந்திரம் செல்லி வழிபாடு செய்யவெண்டும்
குழந்தை பாக்கியிம் திருமணமவரன் அமைதல் பொன்ற வேண்டுதல் நிறைவேறும்.

 

 

Article By: Senthil Kumar Krishna Swamy, MCA, PGDBA

No comments:

Post a Comment

Youtube Videos List

"Video: Devanga The Truth Unfold"

"Video: ದೇವಾಂಗ ಇಲ್ಲಿಯವರೆಗೆ ತಿಳಿದಿಲ್ಲದಂತಹ ಸತ್ಯಗಳು"

"Video: தேவாங்க (இதுவரை அறியப்படாத உண்மைகள்)"

Sponser:

Sponser: