தேவாங்க பொற்காலம் :
தேவாங்க இனம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த
பொற்காலம் போஜராஜன் காலம் என்று சொல்வது மிகை ஆகாது. அந்த காலமே நம் தேவாங்க
மக்கள் கல்வியிலும், ஞானத்திலும் உட்சத்தில் இருந்தனர் என்பதற்கான கீழுள்ள சிறு விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
தாரா நகரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்த
போஜராஜன் ஒரு தேவாங்க மன்னன் என்பது நம்மில் பலருக்கும் பெரும் வியப்பை அளிக்கவல்ல
ஒன்று. போஜராஜ மன்னன் பல் கலை வித்தகன் என்பதாலும் மிக சிறந்த மன்னன் என்பதாலும்
நம் தேவாங்க குலத்திற்கு அவரால் மிகுந்த பெருமை எனலாம்.
போஜராஜன் தன் நாட்டில் பின்வருமாறு பிரகடனம்
செய்திருந்தான்!
" விப்ரோபி யோ பவேன்ன மூர்க்க: ச புராத்ஹிரஸ்து மேI
கும்பகாரோபி யோ வித்வான் ச திஷ்டது புரே மமII“
மேலுள்ள பிரகடன பாடலிற்கான விளக்கம் :-
“அந்தணன் ஆனாலும்
படிப்பறிவற்ற யாரோவரும் என் தேசத்தில் வசிக்க வேண்டாம். குயவனாக இருந்தாலும்
கற்றறிந்தவன் மட்டும் என் தேசத்தில் வசிக்கட்டும்”
போஜராஜன் ஆண்டு வந்த நாட்டில் எல்லா மக்களும் கவி
பாடுவார்கள் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழியே உண்டு. அதனால் பொறாமை கொண்ட அடுத்த நாட்டு மன்னன் போஜராஜனை மட்டம் தட்ட எண்ணி தன் நாட்டு கவிஞன் ஒருவனை தூதனாக அனுப்பிவைத்தான். போஜராஜனின் நாட்டுக்கு வந்த கவிஞன், அந்த நாட்டின் ஒரு தொலை தூர கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு நெசவாளியைத் தன்னுடன் அழைத்து கொண்டு போஜராஜனை சந்திக்க போஜராஜனின் அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனைக்கு வந்த அவன் “மன்னா ! உன் நாட்டில்
சிறுபிள்ளைகள் முதல் முதியோர் வரை எல்லோரும் கவி பாடுவார்கள் என்று புகழப்படுகிறதே
அது உண்மையோ என்றான்? அது உண்மை எனில் இதோ இந்த நெசவாளி கவி பாடுவானா? என்றும் கேட்டான். இதை கேட்ட போஜ ராஜனின் முகத்தில்
புன் சிரிப்பு மலர்ந்தது. புன்சிரிப்பை பார்த்த அடுத்த நட்டு கவிஞனின் முகத்தில் குழப்பம் தோன்றியது. போஜராஜன் தன் கண்ணால் அந்த நெசவாளிக்கு கோடி காட்டா.
அந்த நெசவாளி மிக அருமையான சம்ஸ்கிருத பாடல் ஒன்றின்
மூலம் அந்த கவிஞனுக்கு பதில் ஒன்றை கூறலானான்.
“காவ்யம் கரோமி ந ஹி சாருதரம் கரோமி
யத்னாத் கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே போஜராஜ கவயாமி வயாமி யாமி ”
இந்த பாடலின் பொருள்:
நான் கவி பாடுவேன், ஆனால் நன்றாக பாட மாட்டேன் என்று
நினைக்கிறேன்.இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் அது நன்றாக ஆகிவிடும். போஜ ராஜனே !
உனது காலடியில் இருக்கும் ரத்தினப் பலகையோ வேறு நாட்டு மன்னர்களின் மணி
முடியிலிருந்து செய்யப்பட்டது. நான் கவிதை செய்கிறேன், நெசவும் செய்கிறேன். இதோ
உன் அனுமதியுடன் வெளியே செல்கிறேன்.
கவிதை செய்கிறேன் (கவயாமி)
நெசவு செய்கிறேன் (வயாமி),
வீட்டுக்குப் போகிறேன் (யாமி).
வரிகளின் கடைசி மூன்று வினைச் சொற்களை கொண்டு தனது
திறமை காட்டி எல்லோரையும் வியக்கவைத்தான்.
போஜராஜனின் நாட்டில் இருந்த அனைத்து தேவாங்க மக்களும்
மிகுந்த கல்வி அறிவுடனும் ஞானத்டுடனும் இருந்தனர் என்பது இதிலிருந்து நமக்கு
புலப்படுகிறது.
போஜராஜனின் புகழுக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக
இருந்தது நம் தேவல மகரிஷியே. தேவல மஹரிஷியின் ஐந்தாவது அவதாரமான வரருசி அவதாரம்
கொன்டிருந்தது போஜராஜனின் கலாமென்பதும்
போஜராஜனின் அரசவையிலேயே காளிதாசருடனும் இன்னும் பல பல முனிவர்களுடனும் இவரும் வீட்றிறுந்து போஜராஜனுக்கு வேண்டிய ஞானத்தை வழங்கி போஜராஜனை சிறக்கச்செய்தார்.
கட்டுரை :
செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி , MCA, PGDBA, ccna, ccnp, itil, iso iec /20000
கும்பகாரோபி யோ வித்வான் ச திஷ்டது புரே மமII“
யத்னாத் கரோமி யதி சாருதரம் கரோமி
பூபால மௌளி மணிமண்டித பாத பீட
ஹே போஜராஜ கவயாமி வயாமி யாமி ”
நெசவு செய்கிறேன் (வயாமி),
வீட்டுக்குப் போகிறேன் (யாமி).
No comments:
Post a Comment