தேவாங்க
மக்களை கிருத்துவ மதத்திற்கு மாற்ற முயலும் ஜோஸ்வா திட்டங்கள் (ஜோஸ்வா ப்ராஜெக்ட்)
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
என்ன
இந்த ஜோஸ்வா ப்ராஜெக்ட், இது எப்படி நம்
தேவாங்க மக்களை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முதலில் ஜோஸ்வா ப்ராஜெக்ட் எப்படி யாரால் ஆரம்பிக்க பட்டது என்பதை விரிவாக பார்ப்போம்.
1980 ஆம்
ஆண்டு Pat Robertson (பேட் ராபின்சன்) , Billy Graham (பில்லி கிரகாம்) போன்றோர்களால் நடத்தப்படும் Evangelical Christian organizations (இவிலான்ஜிகல் கிருத்துவ அமைப்புக்கள்) *மத மாற்றத்தை மட்டும்
குறிக்கோளாக கொண்ட அமைப்புக்களான*
1. International Mission Board (இன்டர்நேஷனல் மிஷன்
போர்டு),
2. Southern Baptist Convention (சௌத் பேப்டிஸ்
கன்வென்சண்),
3. Christian Aid (கிறிஸ்டியன்
எயிட்),
4. World Vision (வேர்ல்ட்
விஷன்),
5. Seventh Day Adventist Church (செவென்த் டே
அட்வெண்டிஸ்ட் சர்ச்)
போன்ற
மிக பெரிய அமைப்புகளுடன் இன்னும் பல மத மாற்ற
அமைப்புகள் ஒன்று இணைந்து இந்திய துணை கண்டத்தில் மத
மாற்றத்தை மேற்கொள்ள *"எல்லோர்க்கும் தேவாலயம் எல்லோர்க்கும் நற்செய்தி"* என்ற வாசகத்தோடு *AD2000* என்ற திட்டத்தை
அறிவித்து மத மாற்றத்தை வெகுவாக
செய்து வந்தது. இந்த திட்டத்தை உலக
முழுவதும் விரிவாக்கும் வகையில் அடுத்த கட்டமாக 10/40 என்ற திட்டத்தையும் செயல்
படுத்த ஆரம்பித்தது. 10 முதல் 40 டிகிரி பூகோள ரேகை மத்தியில் அதிகமாக
ஹிந்து, முஸ்லீம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்த மக்களே இருப்பதை ஆய்வில் அறிந்த அவர்கள் இந்த மக்களை கிருத்துவ
மதத்திற்கு மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு இந்த திட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த
மதமாற்றத்தை இன்னும் விரிவான மத, இன, ஜாதி,
பொருளாதார ஆய்வு கொண்டு விரிவாக மேற்கொள்ள எண்ணிய கிருத்துவ மதமாற்ற அமைப்புகள் ஜோஸ்வா திட்டம் 1 (Joshua Project I)
ஜோஸ்வா திட்டம் 2 (Joshua Project
II) என்ற புதிய திட்டத்தை பிந்தங்கிய மக்களை ஊக்குவிக்கும் ஆய்வு திட்டம் என்ற பொய்ய்யன பெயரில்
தொடங்கி செயல் படுத்தி வருகிறது.
*ஜோஸ்வா
திட்டம் 1 & ஜோஸ்வா திட்டம் 2*
(இதன்
முழுவிபரத்தை இந்த இனைய தளத்தில்
காணலாம் :
https://joshuaproject.net/)
அவர்களே
அருவித்துக்கொண்டபடி ஜோஸ்வா திட்டம் பின் வரும் பைபிள்
வரிகளின் உத்வேகதால் தொடங்கப்பட்ட ஒன்று.
"This gospel of the kingdom shall be preached in the
whole world as a testimony to all the nations, and then the end will
come." -- MATTHEW 24:14
இதன்
மொழிபெயர்ப்பு.
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள
சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும் --MATTHEW
24:14
கிருத்துவம்
அல்லாத மக்களை பற்றிய இன,மத,ஜாதி
அடிப்படியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் மிஷனரி
குழுக்களுக்கு உதவும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற பட்டும் மேம்படுத்ப் பட்டும் வருகிறது. செப்டம்பர் 2018 ஆம் ஆண்டுவரை 17,014 இனங்களை
இது கண்டறிந்துள்ளது. இதில் 7,079 இனங்களை இன்னும் கிருத்துவ மதம் சிறிதும் சென்றடைய
வில்லை என்றும் பட்டியல் இட்டுள்ளது. உலகத்தின் 7.60 பில்லியன் மக்கள் தொகையில் 3.15 பில்லியன் மக்களை இன்னும் மதம் மாற்றும் முயற்சியில்
உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில்
வெறும் 41.5 % மக்கள் மட்டும் கிருத்துவரல்லாத மக்களாக இருப்பதாக அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது. உலகம் முழுவதும் 653 மத மாற்ற திட்டங்கள்
செயல் படுத்தபட்டு வருவதாக அந்த இனையதளம் செய்தி
வெளியிட்டுள்ளது.
ஜோஸ்வா
ப்ரோஜெக்ட் ஆய்வுகளை கொண்டு *சர்ச் பிளான்டிங் [தேவாலயம் நடுதல்] Church Planting* என்ற திட்டத்தின் கீழ்
மதம் மாற்றம் செய்ய பணிக்கிறது. உலக மக்கள் அனைவரையும்
கிருத்துவர்களாக
December 31, 2025 க்குள்
மதம் மாற்ற போர்க்கால அவசரநிலையில் எந்த ஒரு பெரும்
கட்டணமும் கொண்டு (no matter the cost) செயல் படுத்தியே ஆகவேண்டும் என்று முனைப்புடன் உள்ளது.
(இதன்
முழுவிபரத்தை இந்த இனைய தளத்தில்
காணலாம்:
https://www.2414now.net/)
ஜோஸ்வா
திட்டதிக்கு திரட்டப்பட்ட நிதியின் அளவை கேட்டால் உங்களில்
சிலர் அதிர்ந்து போவீர்கள் சிலர் மயக்கம் போட்டு கூட விழலாம் (இந்த
இணையதளம் இப்போது உபயோகத்தில் இருந்து நீக்கி கொள்ளப்பட்டுள்ளது https://www.aboutmissions.org/statistics.html)
இந்த இனைய தளத்தின் படி
11.4 பில்லியன் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டுள்ளது என்பதை தெருவிக்கிறது. இந்திய ரூபாயில் இது 8,23,13,70,00,000.
சரி
இப்போது தேவாங்க மக்களை இது எப்படி குறிவைக்கிறது
என்பதை பார்ப்போம்.
(இதன்
முழு விவரத்தையும் இந்த இணையதள பக்கத்தில்
பார்க்கலாம் :
https://joshuaproject.net/people_groups/20663/IN)
2.06 % தேவாங்க
மக்களை ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாற்றியுள்ளதாக இந்த இணையதள புள்ளி
விபரம் தெரிவிக்கிறது.
மீதம்
இருக்கும் அனைத்து தேவாங்க மக்களையும் மதம் மாற்ற தேவாங்கரின்
வரலாறு, தொழில், மொழி வசிக்கும் இடம்
போன்ற விபரங்களை இவர்கள் சேகரித்து தேவாங்க மக்கள் பேசும் மொழியில் பைபிள் அச்சு அடிக்கப்பட்டுள்ளதையும், தேவையான கையேடுகள், விடீயோக்கள், ஆடியோகள் தயாராக இருப்பதையும் இது சரிபார்த்து கொண்டுள்ளது.
மேலும்
தேவாங்க மக்களை மதம் மாற்ற செய்யப்படவேண்டிய
விஷயம் என்று இந்த இணையதளம் பட்டியல்
இட்டு உள்ள விஷயம் பின்வறுமாறாறு.
1. தேவாங்க
மக்களுக்குகாண ஆன்மீக பிரச்சினைகளை தீர்க்க ஆண்டவர் (இயேசு) வின் பதில்களை கேட்கும்
மனத்தை உருவாக்க வேண்டும் என்கிறது.
2. புத்திசாலி
அல்லாத இந்த மக்களிடம் "நாம்
பார்ப்பதெல்லாம் யாரால் படைக்கபட்ட ஒன்று" என்ற கேள்வியை உருவாக்கவேண்டும்.
(These unusually creative people need to ask the questions, "Who created
what we see?
3. நாம்
யாரால் படைக்கப்பட்டோம் என்ற கேள்வியை இந்த
தேவாங்க மக்களிடம் எழுப்ப செய்ய வேண்டும்.
தேவாங்க
மக்களை அவர்களுக்கு புரியும் மொழியில் உள்ள பைபிளுடன் தொடர்புகொள்ளுங்கள்
என்றும் பணிக்கிறது.
A. தேவாங்க
மக்களை அவர்களின் உண்மையற்ற கடவுள் பற்றுகளிலிருந்தும் பிணைப்புகளிருந்தும் நம் தேவன் யேசுவின்
அருளால் விடுவிக்கப்பட பிரார்த்தனை செய்யுங்கள் என்கிறது.
B. தேவாங்க
மக்கள் அவர்களின் பாராம்பரிய வழிபாட்டு முறையை விடுத்தது தேவன் யேசுவின் வார்த்தைகளை உணர பிரார்த்தனை செய்யுங்கள்
என்கிறது.
C. தேவாங்க
மக்கள் தேவன் யேசுவின் வார்த்தைகளை வரவேற்பதை பெருக்க, தேவன் யேசுவின் வார்த்தைகளின் மீது செல்வாக்கு உண்டாக
தேவன் யேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்கிறது.
D. தேவாங்க
குடும்பங்கள் முக்கியமாக தேவாங்க இளைனர்களும் குழந்தைகளும் தேவன் யேசுவின்
கருணையினாலும் அன்பினாலும் ஈர்க்கப்பட பரிசுத்த ஆவியிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்கிறது.
இவர்கள்
இவ்வளவு பெரிய தொகையை எப்படி திரட்ட முடிகிறது?
நம்
நாட்டில் வர்த்தகம் செய்யும் பெரிய/சிறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிருத்துவ கம்பெனிகள் அவர்களின் லாபத்தில் 7% இது போன்ற செயல்
பாட்டிற்காக கொடுப்பது வழக்கமான ஒன்று.
இந்த
பணத்தை கொண்டு மதம் மாற்றம் செய்ய
எந்த மாதிரியான மறைமுக செயல்களில் ஈடுபடுகிறது?
1. பொதுவுடமைவாதிகள்
என்ற பெயரில் நம் பராம்பரியம், வழிபாட்டு
முறை, தெய்வங்களை இழிவுபடுத்தி நம் மனங்களில் சலனத்தை
உருவாக்குவது.
2. இந்தியாவில்
பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தை மட்டும் பொதுவுடமைவாதிகள் என்ற பெயரில் இழிவு படுத்தும் செயலில் ஈடுபடுவது.
3. பெரும்
மக்கள் தொகையை ஈர்த்து வரும் இந்து சாமியார்களின் மீது பாலியல் மற்றும்
மோசடி குற்றச்சாட்டுகளை உருவாகும் வகையில் திட்டங்களை செயல் படுத்துவது.
4. இந்து
என்ற பெரும் கூட்டத்தை மொழி, இனம், ஜாதி என்ற சிறு
சிறு குழுக்களாக பிரிப்பது. தமிழன் இந்து இல்லை என்று ஒரு பொய்யான தோற்றத்தை
உருவாக்க முயற்சிப்பது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லும் ஒருவருமே கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள் இல்லை என்று சொல்வதில்லை.
5. இந்தியா
பொருட்களை, இந்து கம்பெனியால் தயாரிக்கபடும் பொருட்களின் மீது பொய்யான குற்ற
சாட்டுகள் கொண்டு முடக்க முயல்வது.
6. திரைப்படம்,
தொலைக்காட்சியில் கிருத்துவ பிரபலங்களை உருவாக்குவதும் அவர்களை கொண்டு மத பிரச்சாரங்களை மேற்கொள்வது.
7. செய்தி
ஊடகங்களின் மீது பெரும் தொகையை
முதலீடு செய்து அவருக்கு தேவையானபடி செய்தியை வெளியிடுவது.
இன்னும்
பல திட்டங்களுடன் நேரடியாகவும் மூளை சலவை மூலம்
மத மாற்றம் செய்வதும் ஒன்று. அவரவருக்கு பிடித்த மதத்தை தேர்ந்தேடுத்துகொள்வது தனிப்பட்ட உரிமை. ஆனால் மதம் மாற்றம் செய்ய
இவ்வளுவு பெரிய தொகை இவ்வளுவு பெரிய
திட்டம் கொண்டு செயல்படுவது நாம் யேசித்து பார்க்கவேண்டிய
ஒன்று.
மத மாற்றத்திற்கான புதிய சூழ்ச்சியாக இந்து மதத்திலிருக்கும் அனைத்து வழிபட்டு முறைகளையும் களவாடப்பட்டுவருகிறது. தேவாலயத்திற்கு இந்து கோவில் போன்ற அமைப்பில் கோபுரம் கட்டியாகிவிட்டது. மெழுகு வர்த்தி போய் இந்து கடவுளுக்கு
ஏற்றுவதுபோல் குத்து விளக்கு முதல் அகல் விளக்கு வரை
வந்தாகிவிட்டது. வெள்ளை நிற பாவாடை போன்ற
உடை மாறி இந்து சாமியார்கள்
போல காவி உடையும் சாது
என்ற பெயரும் பயன் படுத்தபடுகிறது. கொடி
மரம், பூ மாலை, மேரி
மாதாவிற்கு சேலை, கலசம் என்றல்லாம் வந்தாகிவிட்டது. இது எல்லாம் எதற்கு
செய்யப்பட்டது என்பதும் இப்போது புரியவும் தொடங்கிவிட்டது. திருக்குறள் கிருத்துவ நூல் என்றும் , நம்
கோவிலில் சொல்லப்படும் அனைத்து மந்திரங்களும் யேசுவையே குறிக்கிறது என்றும் இந்து மதம் என்பது இல்லை
என்றும் எல்லாம் கிருத்துவ மதத்திலிருந்து வந்தது என்று பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது.
ஆதாரம்
:
Link : 1
Link : 2
https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/
Link : 3
இதற்கெல்லாம்
காரணம் நாம் தான் எது
நடந்தாலும் மதச்சார்பின்மை என்ற பெயரில் வாய்மூடி
இருப்பதும். ஒரு சிலர் கேள்வி
கேட்டாலும் அவர்களையும் நாமே புறக்கணிப்பதும், கேலி
செய்வதும் நம்மை இந்த நிலைக்கு கொண்டு
சென்றுள்ளது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் பொழுது அமைதியான முறையில் நம் கருத்துக்களையும் எதிர்ப்பையும்
தெருவிப்பதும், அமைதியான முறையில் போராடுவதும், சட்ட ரீதியான நடவடிக்கை
எடுப்பதும் நம் கடமை.
தேவங்கரான
உங்கள் வீட்டு கதவும் கூடிய சீக்கிரம் இவர்களால் தட்டப்படும். உங்கள் பதில்களையும் அவர்களை எப்படி எதிகொள்வது என்பதையும் நீங்களே முடிவு செய்த்துக்கொள்ளுங்கள்.
ஜெய்
ஸ்ரீ சவுடேஸ்வரி அன்னை!
ஜெய்
தேவாங்க!
ஜெய் தேவல மகரிஷி!
பரமனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்கள் நாங்கள்,வீர செளடேஸ்வரி அன்னையின் புதல்வர்கள் நாங்கள்,ஒருபோதும் மதம் மாறமாட்டோம் என உரக்கச் சொல்லுங்கள். ஹர ஹர மகாதேவா.
ReplyDeleteநன்றி
Deleteஹர ஹர மகாதேவா
ஹர ஹர மகாதேவா
ஜெய் சவுடேஸ்வரி