இதுவரை நமக்கு
கிடைத்த புதைபடிவங்கள், டிஎன்ஏ (DNA) வை கொண்டு மனிதக் குரங்கிலிருந்து
(Chimpanzee) மனிதன் (ஹோமோ சேபியன்கள்) சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம
வளர்ச்சியடைந்ததாக நவீன அறிவியலும் ஆராய்ச்சியாளர்களும் கணக்கிடுகின்றனர்.
1,70,000 ஆண்டுகளுக்கு முன்புவரை மனிதனின் உடலில் மனிதக் குரங்கு போலவே நிறைய ரோமங்களை
கொண்டிருந்தும் ஆடைகளின் அவசியம் இல்லாமல் இருந்தும் வந்ததாகவும். அதன்பின் மனிதனில்
மட்டுமே காணப்படும் இறக்கை அற்ற பூச்சியாக கருதப்படும் பேன் (Head Louse) உடலில் உருவாகி
மனிதனின் ரோமங்களை தாக்க தொடங்கி மனிதன் தன் உடலில் ரோமங்களை இழக்க தொடங்கினான் என்றும்.
அதன்பின் தான் மனிதன் குளிரையும் உஷ்ணத்தையும் உணர தொடங்கி தன்னையும் தன் உடல் பாகங்களையும்
பாதுகாத்து கொள்ள இலை தழைகள், மரப்பட்டைகளை பயன்படுத்த தொடங்கினான் என்றும். அதன்பின்
வெகுகாலம் கழித்து தோல் பதனிடுதல் முறையை 40,000 ஆண்டுகளுக்கு முன்வரை ஜெர்மனியின்
இருசியாவில் (Eurasia) வாழ்ந்து வந்த நியந்திர்த்தல்ஸ்
(Neandertals) இன மக்கள் கண்டுபிடித்து பயன்படுத்திவந்ததாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். நியந்திர்த்தல்ஸ் மக்கள் வாழ்ந்த காலங்களில்தான் மிகுகங்களின் எலும்பிலான
ஊசியையும் முதல்முதலாக பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வியக்கத்தக்க வகையில் தொல்லியல்-கருவிகள், கலைப்பொருட்கள், குகைக் ஓவியங்களை கொண்டு
செய்த தொல்லியல் ஆய்வின் படி உலகத்தில் தொழில்நுட்பம்
மற்றும் கலாச்சாரங்கள் நவீனத்துவம் அடைந்தது 50,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று
உறுதியாக நம்பப்படுகிறது.
இன்றளவும் விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் பருத்தியின் காலகட்டதைப் பற்றிய ஆதாரங்கள் நம் பாரதத்தின் 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தின் உத்தரகாண்டத்தின் தேவாங்க புராணத்தில் காணப்படுகிறது. மானி அபிமானி என்னும் தேவதைகள் பருத்தியாக பூமியில் விளைய அனுப்பப்பட்டதாக தேவாங்க புராணத்தில் ஆதாரம் காணப்படுகிறது. அது மட்டுமல்லாம் தேவாங்க புராணத்தில் ஸ்ரீ தேவல மஹரியின் தோற்றம், ஆடை தாயார் செய்வதாகான நூல் மற்றும் கருவிகள் பற்றிய விவரங்கள் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சார்லஸ் டார்வின்தான் உலகில் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்தை பற்றி பரிமாண கோட்பாடு எழுதினார் (Darwin's Theory of Evolution). ஆனால் நமது பூரணங்கள் மற்றும் இதிகாசங்களில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி மிக தெளிவாக (தசாவாதார) கோட்பாடாக சொல்லப்பட்டுள்ளது. அது மிக தெளிவாகவும் அறிவியல் பூர்வமாகவும் பரிணாம கோட்பாடாக ஒத்துக்கொள்ளப்படுகிறது. நமது வேதங்கள், புராணங்கள் இதிகாசங்கள் அனைத்துமே அறிவியலை பதிவு செய்யது வைக்க உருவாக்கப்பட்டவை. அது கதை வடிவிலும் பாடல் வடிவிலும் சொல்லப்பட்டதால் இன்றய சமுதாயத்தினர்க்கு சலிப்பு தட்டும் நவீன அறிவியல் புத்தகம் போல் இல்லாமல் இருப்பதாலும் அவைகளை நாம் அறிவியல் புத்தகங்களாக பார்க்க மறுக்கின்றோம். உயிரினங்களின் பரிணாம (தசாவாதார) கோட்பாடு போன்றே ஆடை பற்றிய அறிவியல் பெட்டகமாக நமது தேவாங்க புராணம் திகழ்கிறது. ஆதியில் மனிதன் ஆடை இல்லாமலும் பிறகு இலை, தழைகளையும், மரப்பட்டைகளையும் அதன் பின் தோலிலான ஆடைகளும் அதன் பின் பருத்தியிலான ஆடை என்ற தேவாங்க புராண ஆடையின் பரிணாம கோட்பாடு நவீன அறிவியலின் ஆடையின் பரிணாம கோட்பாட்டிற்கு மிக சரியாக ஒத்து போகின்றது. தேவாங்க புராணத்தில் காணப்படும் அறிவியல் கோட்பாட்டின்படி இன்று மனிதர்கள் பயன்படுத்தும் பலவகை ஆடைகளுக்கும் மூலமாக ஸ்ரீ தேவல மஹரிஷியியே திகழ்ந்தார் என்பதும் இந்த உலகில் ஆடை தயாராக அவரே காரணமாக இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆடை பற்றிய நவீன ஆராச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துபடியும் , இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களின் படியும் ஸ்ரீ தேவல மஹரியின் காலத்தை நாம் கணக்கிட்டு கொள்ள முடியும்.
கிரேக்க தொன்மவியல் புராணப்படி மற்றுமொரு கடவுள் லீட்டோ (Leto) இவர்தான் அப்பல்லோ -சூரிய கடவுள் (Apollo) மற்றும் ஆர்ட்டிமிஸ் - சந்திர கடவுள்களின் (Artemis) தாய். அவர் தங்க தார் குச்சி கடவுள் (Leto of the Golden Spindle) என்றும் அழைக்கப்பட்டார். லீட்டோ ஒரு சிறந்த நூல் நூட்பவராகவும் புகழ் பெற்ற நெசவாளியாகவும், தனது இழைகள் சிக்காமல் இருக்க சிறந்த கருவிகளை வைத்திருந்ததாகவும் புராணக் கதைகளில் சொல்லப்படுகிறது.
எகிப்து தொன்மவியல் புராணப்படி சிவப்பு கிரீடத்தில் காட்சியளிக்கும் நெசவிற்கான தெய்வம் நெய்த் (Neith). அந்த தெய்வம் ஆண் மற்றும் பெண் பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பு தெய்வமாகவும். மற்ற எகிப்து கடவுள்கள் தங்களின் தீர்க்கமுடியாத குறைகளை இந்த நெய்த் என்னும் தெய்வத்திடமே வந்து தீர்த்துக்கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. நெய்த் என்ற அந்த தெய்வத்திற்கு பெயர் வர நெய்யும் தொழிலே காரணமாகவும் இருந்தது. எகிப்திய மொழியில் நெய்த் என்றால் நெசவு என்று பொருள்படும். ஒரு படைப்பாளி தெய்வமாக கருதப்படும் நெய்த் தெய்வம்தான் முதன்முதலின் இந்த உலகத்தை தனது தறியில் நெய்ததாக புராண கதைகளில் சொல்லப்படுகிறது. நெசவு மற்றும் கலைகளின் தெய்வமான அவர் பெண்கள் மற்றும் திருமணத்தின் பாதுகாவலராகவும் கருதப்பட்டார், எனவே எகிப்திய அரச குடும்பப் பெண்கள் பெரும்பாலும் நெய்த்தின் பெயரைப் தங்களுக்கு சூட்டிக்கொண்டனர். படைப்பு மற்றும் நெசவு தெய்வமான அவர் அனுதினமும் தனது தறியில் உலகை மீண்டும் நெய்வதாக நம்பப்படுகிறது.
நெய்த் என்ற தெய்வம் சனாதன (இந்து) கலாச்சாரத்திற்கு மிகவும் ஒத்து போகும் ஒரு தெய்வம். முதலில் தெய்வத்தின் பெயரை எடுத்து கொண்டால் நெய்த் ஆடை நெய்யும் தொழிலுக்கு (நெய்த்தல்) என்று தமிழிலும் இதை ஒத்த வார்த்தைகளே - (நெய்கே) என்று கன்னடத்திலும், (நெய்யடம்) என்று தெலுங்கிலும் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. நெசவிற்கான எகிப்திய தெய்வத்தின் பெயரும் தொழில் பெயராக அதே (நெய்த்தல்-நெய்த்) சொல் கொண்டு அழைக்கப்படுவதும், அந்த பெண் தெய்வம் ஸ்ரீ சவுடேஸ்வரி தேவியை நினைவூட்டுவதாகவும், ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரீஸ்வரரை நினைவூட்டுவதாகவும், பிற தெய்வங்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்கும் சிவபெருமானின் அம்சத்தை ஒத்திருப்பதும் ஏதோ எதிர்பாராமல் நடந்தவை அல்ல. இது நம் சனாதன (இந்து) தெய்வங்களும் கலாசாரமும் உலகம் முழுவதுமே பரவியிருந்ததயும் காலப்போக்கில் அந்த நாடு மற்றும் மொழிகளுக்கு ஏற்ப பெயர்களும் கதைகளும் மருவி வழங்க பெற்று வந்தது உறுதிப்படுத்தப்படுகிறது.
ஸ்ரீ தேவல மகரிஷி வெறும் சனாதன (இந்து) கலாசாரத்திற்கானவர் மட்டுமல்ல. உலக மக்கள் அணைவருக்கும் முதன்முதலில் ஆடையை கொடுத்தவர், அவர் உலக மக்கள் அணைவருக்குமானவர். அவரின் வரலாற்றையும் பெருமைகளையும், நூல் மற்றும் ஆடையின் வரலாற்றையும் நம் தேவாங்க சமுதாயம் மட்டுமல்லாம் இந்த உலகத்திற்கே கொண்டு சொல்லவேண்டியது தேவாங்கரான நமது கடமையாகிறது. அந்த பணியை செய்ய உறுதியேற்போம்.
கட்டுரை:
செந்தில் குமார்
கிருஷ்ணஸ்வாமி, MCA, PGDBA
No comments:
Post a Comment