ஸ்ரீ தேவர தாசிமைய வரலாறு
ஸ்ரீ தேவல மஹரிஷியின் 7 ஆவது அவதாரம்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம்
யாதகிரி ஜில்லா சுரபுர
தாலுகா முதனூரு என்னும்
கிராமத்தில் சிறந்த சிவபக்தரான
ராமய்யா மற்றும் சங்கரி
தம்பதியருக்கு மகனாகவும் ஸ்ரீ தேவல
மஹரிஷியின் 7 ஆவது
அவதாரமாகவும் ஸ்ரீ தேவர
தாசிமைய 980 ஆம் ஆண்டு சித்திரை
நட்சத்திரமும் பஞ்சமி திதியும்
கொண்ட நன்னாளில் ஜனனமெடுத்தார்.
தம் தந்தை தாய்ப்போலவே
இவரும் தம் இளமை
காலம் முதலே இறை
நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தார். தன்
இளமை காலத்தில் முதனூரு
கிராமத்தில் இருந்த குருகுலத்தில்
வேதங்களும் சாஸ்திரங்களளும் பயின்று தேர்ச்சி பெற்றார்.
இவர் தம் ஊரிலிருந்த
ராமநாத கோவிலின்மீதும் கடவுள்
மீதும் மிகுந்த பற்று
கொண்டிருந்தார். தம் கல்வி
கட்கும் நேரம்
தவிர ஓய்வு நேரங்களில்
ஆட்டம் , பாட்டம் , பூஜை , தியானம்
என்று ராமநாத கோவிலில்
தம் பெரும் பொழுதை
கழிக்கலானார்.
தம் இளமை கல்வியில்
தேர்ச்சி பெற்ற பிறகு
கல்வியில் தீராத பற்று
கொண்டிருந்த ஸ்ரீ தேவர
தாசிமைய தன் குருகுல
மேல்படிப்பிற்காக ஸ்ரீசைலம் சென்றார். அக்
காலகட்டத்தில் ஸ்ரீசைலம் குருகுல கல்வியில்
முதன்மை நகரமாக விளங்கிவந்தது.
ஸ்ரீசைலத்தில் மிக சிறந்த
குருமார்கள் குருகுல பயிற்சி அளித்துவந்தனர்.
ஸ்ரீ தேவர தாசிமைய
ஸ்ரீசைலம் சூர்ய
சிம்மாசன 4ஆவது ஜகத்
குரு ஸ்ரீ சந்திரகுண்டு
சிவாச்சாரிய அவர்களிடம் சிஷ்யராய் சேர்ந்த
மேலும் வேதங்கள் , சாஸ்திரங்கள்
, தியானங்கள் என்று பலவற்றையும்
கட்கலானார். குருகுல கல்வியில் தேர்ச்சி
பெற்ற ஸ்ரீ தேவர
தாசிமைய தம் குரு
ஸ்ரீ சந்திரகுண்டு சிவாச்சாரிய
அவர்களிடம் சிவா தீக்ஷையும் பெற்றார்.
அவர் கன்னடம் , தெலுங்கு
, சமஸ்கிரதம் போன்ற மொழிகளை
கற்று சிறந்த வல்லுனராகவே விளங்கினார்.
ஸ்ரீ தேவர
தாசிமைய தான் தீக்ஷை
பெற்றபிறகு புண்ணிய சேத்திரங்ள் பலவற்றையும்
தரிசிக்கலானார். இவர் தான்
செல்லும் வழியெங்கும் சரண தத்வத்தை
மற்றவர்களுக்கும் போதித்து வந்தார். இவர்
இப்படி போதித்து வந்த
வழியில் சிலர் இவரை
தாக்கவும் முட்பட்டனர். தாக்க வந்தவர்களிடம்
அன்பு செலுத்திய ஸ்ரீ
தேவர தாசிமைய அவர்களுக்கும்
போதனைகள் செய்து இவரின்
பெரும் அன்பினால் அவர்களை
தன் சீடர்களாகவே மாற்றினார்.
ஸ்ரீ தேவர தாசிமைய
எவ்வன வயதை அடைந்ததும்
அவரின் பெற்றோர்களால் இவருக்கு
திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் ஸ்ரீ தேவர
தாசிமையவோ திருமண வாழ்க்கையில்
விருப்பம் இல்லாதவரை இருந்துவந்தார். தம்
பெற்றோர்களும் பெரியோர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு
நிபந்தனையுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அவரின் நிபந்தனைகளாவது
மணல் கலந்த அரிசியும்
கரும்பு மட்டும் கொண்டு
தண்ணீரும் விறகும் இல்லாமல் உணவு
சமைக்கக் கூடிய ஒரு
பெண் கிடைத்தால் மட்டும்
தான் மணந்து கொள்ள
தயார் என்று நிபந்தனை
விதித்தார். கர்நாடக
மாநிலம் குல்பர்கா ஜில்லை
அபஜல்புரா தாலுகா பப்பூரூ
என்னும் கிராமத்தை சேர்ந்த
மல்லிகார்ஜுன மற்றும் மஹதேவி தம்பதியரின்
மகளான துக்களே என்பவர்
இவரின் நிபந்தனை படி
உணவு சமைக்க ஒப்புக்கொள்ள,
தேவர தாசிமைய கொடுத்த
அரிசியையும் கரும்பையும் பெற்றுகொண்டு இன்னும்
கொஞ்சம் கரும்பு சேர்த்து
அதிலிருந்து கரும்பு சாறு பிழிந்து
அதில் அரிசியிலிருந்த மணல்
நீக்கி கழுவி, கரும்பு
சக்கையை விறகாக பயன்படுத்தி
அரிசியையும் கரும்பு சாற்றையும் கொண்டு
அரிசி பாயசம் செய்து
கொடுத்தார். இப்படி தாசமயரின்
நிபந்தனை படி உணவு
சமைத்ததால் துக்களே தேவியை தாசமய
மணந்து கொண்டார். இவர் இல்லறத்திலும்
இறைவனை எய்தலாம் என்பதை
உலகிற்கு உணர்த்தினார்.
தம் திருமணத்திற்கு பிறகு நெசவு
தொழிலை செய்து வந்த
அவர் தாம் நெய்த
புடவையை சந்தையில் விற்று
அதில் வந்த பணத்தை
கொண்டு சிறப்பாக வாழ்வு
நடத்தி வந்தார். இரு
இளைஞர்கள் இவரிடம் இல்லறம் சிறந்ததா
அல்லது துறவறம் சிறந்ததா
என்ற கேள்விக்கு பதில்
பெற ஸ்ரீ தேவர
தாசிமைய அவரை சந்திக்க
அவரின் வீட்டிக்கு வந்தனர். இளைஞர்கள்
தங்களின் கேள்விகளை கேட்கும் முன்பே
தேவர தாசிமைய அறிந்து
கொண்டார். அவ் இளைஞர்களை
தம் வீட்டில் இருக்க
செய்து விட்டு ஏதும்
சொல்லாமல் தன் நெசவு
தொழிலை செய்யலானார். இளைஞர்களும்
ஏதும் பேசாமல் அவரின்
தறி அருகிலேயே அமர்ந்து
கொண்டனர். மதிய வேளையில்
சேலை நெய்யும் பொழுது
ஒரு நூல் அறுந்து
போக அதை பிணைக்க
தன் மனைவியிடம் விளக்கு
கொண்டு வர சொன்னார்
துக்களே தேவியும் அப்படியே
விளக்கு கொண்டு வந்து
கொடுத்தார். இதை பார்த்த
இளைஞர்கள் இவரின் செயலை
கண்டு வியந்தனர். மதிய
உணவு வேளையின் போது
தேவர தாசிமையவிற்கும் அந்த
இளைஞர்களுக்கும் துக்களே தேவி முந்தினம்
செய்திருந்த நீராகாரத்தை உன்னக் கொடுக்க
அந்த இளைஞர்கள்
மள மள வென்று
குடித்துவிட்டனர். ஆனால் தேவர
தாசிமையவோ அதை குடிக்காமல்
துக்களே தேவியிடம் உணவை
ஆற்ற விசிறி கொண்டுவர
சொன்னார். துக்களே தேவியும் அப்படியே
விசிறி கொண்டுவந்து உணவை
விசிற ஆரம்பித்தார். இதை
பார்த்த இளைஞர்கள் தம்பதிகளுக்கு
புத்தி பேதளித்து விட்டதோ
என்று ஐய்யம் கொண்டனர்
தங்கள் கேள்விகளை கேட்காமலே
திரும்பி செல்ல முடிவெடுத்து
தேவர தாசிமையரிடம் விடைபெற தேவர
தாசிமைய உங்கள் கேள்விகளுக்கு
விடை கிடைத்ததா என்று
கேட்டார். அதற்கு அந்த
இளைஞர்கள் தாங்கள் தேவர தாசிமையரிடம்
கேள்வியே கேட்கவில்லையே இருந்தும் தாங்கள்
கேள்விகளுடன் வந்திருப்பதை தேவர தாசிமை
அறிந்து கொண்டதை கண்டு
ஆச்சரியத்திற்குள்ளாயினர். தேவர தாசிமை
அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல
ஆரம்பித்தார்.
இது போன்ற மணைவி
கிடைத்தால் இல்லறம் சிறந்தது
கணவனை புரிந்து கொள்ளாது எதிர்த்து
பேசும் மணைவி கிடைக்கும்
பட்சத்தில் துறவறம் சிறந்தது என்று
பதில் கூறினார். இது
போன்ற பற் பல நிகழ்ச்சிகள் இவரின் பெருமைகளை
விளக்குவதாக இருந்து அந்த பகுதி
மட்டுமல்லாது வேறு நகரங்களிலும்
இவரின் பெருமை பிரசித்தி பெறலானது.
இவரின் பெருமையை அறிந்த ஆந்திர
மாநிலத்திலன் பட்டலகேரே என்னும் நகரத்தின்
ராணியான சுக்கலதேவி என்பவர்
தேவர தாசிமையாவை குருவாக
ஏற்றுக்கொண்டு அவரிடம் சைவ தீக்ஷை
பெற்றார். இதை அறிந்த
பட்டலகேரேயின் ஜைன முனிகள்
கோவம் கொண்டு அரசனிடம் புகார் கொடுத்தனர்.
தாங்கள் ஜைன மதத்தையும்
ராணி சைவத்தையும் மேற்கொள்ளுதல்
முறையோ என்றும் கேட்டனர்.
அதற்கு அரசன் தன்
காவலர்களிடம் தேவர தாசிமையாவை
பிடித்து வந்து அவரை
ஜைன மதத்தை தழுவ
செய்யவும் என்று உத்தரவிட்டார்.
தேவர தாசிமையாவும் அரசனின்
சபைக்கு வந்து வாத
விவாதங்களில் ஈடுபட்டார் அப்பொழுது தேவர
தாசிமையா வேண்டுகோளிற்கு இசைந்து ஒரு போட்டியும்
அறிவிக்க பட்டது. தேவர தாசிமையா
தான் போட்டியில் தோற்றால்
ஜைன மதத்தை தழுவுவதாகவும்
எதிர் போட்டியாளர்கள் தோற்றால்
அரசன் உட்பட அனைவரும்
சைவ மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று நிபந்தனை விதித்தார்.
அதற்கு இசைந்து போட்டியும்
தொடங்கி பல கேள்விகள்
பதில்கள் என நடந்தன.
எதிலும் வெற்றிபெற முடியாத
ஜைன போட்டியாளர்கள் இறுதியில் தேவர தாசிமையாயாவை
கொல்ல திட்டம் தீட்டி
ஒரு குடத்தில் கொடிய
விஷம் கொண்ட நாக
பாம்பினை வைத்து குடத்தின்
வாயை துணியால் கட்டி
அவரிடம் கொண்டுவந்து இதில்
என்ன உள்ளது என்று
கண்ணால் பார்க்காமல் கையால்
மட்டும் தொட்டு பார்த்து
சொல்லவேண்டும் என்றனர். குடத்தை பார்த்ததுமே
தேவர தாசிமையா இதில்
நாகபரணமான ஈஸ்வரன் உள்ளான் என்று
உரைத்துவிட்டு கண்மூடி குடத்தில் தான்
கையை விட்டு ஒரு
சிவ லிங்கத்தை எடுத்து
கொடுத்தார். இதை கண்டு
அணைவரும் ஆச்சரியத்திற்குள்ளாயினர். அவர்களின் தவறுகளை உணர்ந்துகொண்டனர்.
அவர் எடுத்து கொடுத்த லிங்கத்தை
உத்தரரேஸ்வர லிங்கம் என்று பட்டலகேரே
நகரத்தில் ஸ்தாபித்து கோவிலும் கட்டப்பட்டது.
அங்கு இருந்த 700 சத்திரங்களையும்
கோவில்களாக மாற்றினர். அங்கிருந்த அனைத்து
ஜைனர்களும் சைவர்களாக மாறினர்.
இப்படியே தன் நெசவு
தொழிலை செய்தும் மக்களுக்கு
நல்ல உபதேசங்களையும் செய்து
வரும் வேளையில் அவரின்
பக்தியாலும் ஞானத்தாலும் ஒரு அற்புத
ஆடை உருவானது அதை
சந்தையில் விற்றுவர எடுத்துச்சென்றார் ஆனால்
அந்த ஆடையை யாரும்
சந்தையில் வாங்காததால் வீட்டிற்கு திரும்ப
கொண்டுவந்தார். கொண்டுவரும் வேளையில் ஒரு
மரத்தடியில் ஒரு முதியவர்
குளிரினால் நடுங்குவதை பார்த்து அவர்க்கு
அந்த ஆடையை கொடுத்தார்.
அதை வாங்கிய முதியவர்
ஆடையை துண்டு துண்டாக
கிழித்து கை, கால்,
தலை, இடுப்பு என்று
தன உடல் முழுதும்
கட்டிக்கொண்டார். அதை பார்த்த
தேவர தாசிமையாவும் ஏதும்
பேசாமல் தானம் கொடுத்த
பிறகு அந்த ஆடை
அவருக்கே சொந்தம் என்றும் அந்த
ஆடையை அவர் தம்
விருப்பம் போல் எப்படி
வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
என்று உள்ளத்தில் ஆனந்ததுடன்
வீடு திரும்பி தன்
மனைவியிடமும் நடந்தனவற்றை சொன்னார்.
அன்று இரவு உறங்கி
காலையில் எழுந்து பார்த்த பொழுது
தங்கள் வீட்டில் பல
வகை தானியங்கள் நிரம்பி
வழிவதை பார்த்து முதல்
நாள் முதியவர் போல்
வந்தது இறைவனே என்றும்
இறைவனே தானியங்கள் கொடுத்துள்ளதையும்
புரிந்துகொண்டனர். ஸ்ரீ
தேவர தாசிமையர் தன்
கிராமத்தில் இருந்த ராமநாத
ஸ்வாமியை எப்பொழுதும் மனதில் என்னிக்கொண்டே
இறைவன் கொடுத்த ஞானத்தாலும்
ராமநாத ஸ்வாமியின் மொழியாக
உயர்ந்த உலக கருத்துக்கள்
கொண்ட 176 பாடல்கள் பாடினார்.
இவர் எழுதிய 176 "வசனா" வகையை சேர்ந்த
பாடல்களும் திருக்குறள் போன்று மிக
ஆழமான உலக கருத்துக்கள்
கொண்டவை. இறைவனான ராமநாத ஸ்வாமி
கொடுத்த ஞானத்தாலும் ராமநாத
ஸ்வாமியின் மொழியாக இருக்கும் அந்த
பாடல்களை படிப்பதாலும் கேட்பதாலும் நம்
பாபங்கள் அனைத்தும் தொலைந்து நாமும்
நம் குலமும் தழைதோங்கி
அணைத்து செல்வங்களும் நம்மை
வந்து சேரும் என்பது
பெரியோர்களின் சத்திய வாக்கு.
இன்றளவும் அவர் வாழ்ந்து
வந்த வீடு முதனூறில்
அவர்களின் வம்சாவழியரின் பயன்பாட்டில் இருந்து
வருகிறது. அக் காலத்தில்
முதனூறில் பல கோவில்கள்
இருந்து வந்தது அனால்
இப்பொழுது பெரும் கோவில்கள்
பாழடைந்தும் சிதைந்தும் போய்விட்டது.
இறைவன் ஸ்ரீ
தேவர தாசிமையருக்கு தானியங்கள்
கொடுத்ததின் சாட்சியாக இன்றளவும் அங்கு
7 ஏழு புண்ணிய தீர்தங்கள்
உள்ளது.
7 ஏழு புண்ணிய தீர்தங்கள் :
1. ராம தீர்த்தம்
2. லக்ஷ்மண தீர்த்தம்
3. சங்கம தீர்த்தம்
4. பாண்டவ தீர்த்தம்
5. ஆலு தீர்த்தம்
6. சக்கரை தீர்த்தம்
7. மரளு தீர்த்தம்
முதனூறில் தேவர
தாசமைய அவர்கள் சமாதி
உள்ளது என்றும் நம்பப்படுகிறது.
அவர் பூஜித்து வந்த
ராமநாத கோவிலும் அன்னை
இராமலிங்க சவுடேஸ்வரி கோவிலும் உள்ளது.
நம் தேவாங்க குலத்தின் முக்கியமனா
பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீ
தேவர தாசிமைய ஜெயந்தி.
வருடாவருடம் ஏப்ரல்-1 ஸ்ரீ தேவர
தாசிமைய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
தேவல மகரிஷியின் 7 அவதாரங்களும் முக்கியமானவை
என்றாலும் ஏன் தேவர
தாசிமைய தேவாங்க
குலத்திற்கு மிக முக்கியமானவராக
பார்க்கப்படுகிறார் என்பதை பார்த்தால். தேவர
தாசிமைய அவதாரத்தை தவிர்த்து
மற்ற 6 அவதாரங்களும் அரசாங்கத்திற்கு
வெறும் புராண புருஷர்கள்.
தேவர தாசிமைய பற்றிய
பல ஆதாரங்கள் இருப்பதாலும்
அவரின் பாடல்கள் மிக
ஆழமான உலக கருத்துக்களை
கொண்டவையாக இருப்பதாலும் தேவர தாசிமைய
அவரை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.
ஆண்டு தோறும் கர்நாடக
அரசாங்கத்தின் கலாச்சார மையத்தின் சார்பில்
அரசு விழாவாக ஸ்ரீ
தேவர தாசிமைய ஜெயந்தி
கொண்டாடப்பட்டுவருகிறது.
நாமும் ஸ்ரீ தேவர
தாசிமைய ஜெயந்தியை ஆண்டு
தோறும் மறவாமல் கொண்டாடுவோம்.
அவரின் பாடல்களை மறவாது
படித்தோ கேட்டோ நம்
பாபங்களை தொலைத்து அணைத்து செல்வங்களையும்
பெறுவோம்.
வாழ்வில் ஒருமுறையாவது முதனூர் சென்று
அவர் வாழ்ந்த ஊர்
, வீடு அவர் வழிபட்ட
கோவில்களை தரிசிப்பது நம் வாழ்வில்
நமக்கு முக்தியை கொடுக்கும்.
அவரின் பாடல்களை நாள்தோறும்
கேட்டு வந்தாலோ படித்து
வந்தாலோ நமக்கு அனைத்து
நன்மைகளும் கிடைக்கும்.
ஊர் :
ஹிரே முதனூர், சிக்க முதனூர்,
சுரப்புர தாலுகா,
யாதகிரி ஜில்லா ,
குல்பர்கா மாவட்டம் ,
கர்நாடக மாநிலம் - 620916
முதனூருக்கு நேரடி ரயில்
வசதி இல்லை. பெங்களூரிலிருந்து
குல்பர்காவை ரயில் மார்கமாக
அடையலாம்.
குல்பர்காவிலிருந்து
சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் முதனூர் உள்ளது.
ரயில் கட்டணம் விபரம் :
ரயில் கட்டணம் 315 முதல் 355 ரூபாய்
வரை
பெங்களூரிலிருந்து
குல்பர்காவிற்கு செல்லும் ரயில்கள்
விபரம் :
ரயில் எண்
| ரயில்
பெயர் | புறப்படும்
நேரம் | சேரும்
நேரம்
22601
SHIRDI EXPRESS
15:30
01:43
11014
LOKMANYA TT EXP
16:00
03:40
17307
BASAVA EXPRESS
17:00
04:50
12627
KARNATAKA EXP
19:20 05:39
11302
UDYAN EXP
20:45
08:43
22134
SOLAPUR EXP
20:50
06:25
16340
MUMBAI EXPRESS 21:30 09:40
பேருந்து மார்க்கம் :
பெங்களூர் to
யாதகிரி to சுரப்புர to ஹுனுசகி to முதனூர்
கட்டுரை :
- செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி, MCA, PGDBA, ccnp,
itil, iso/ iec 20000
No comments:
Post a Comment